Tuesday, 21 April 2020

உறுதியாக எதிர்த்து போராடு.


விவேகானந்தர் லண்டனில் உள்ள தனது நண்பரின் பண்ணை வீட்டிற்கு சென்று இருந்தார். அங்கு ஒரு நாள் மாலை பண்ணை வீட்டு மைதானத்தில் விவேகானந்தர், அவரது நண்பர், நண்பரின் மனைவி ஆகியோர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதை கண்ட நண்பரின் மனைவி அச்சத்தில் அப்படியே மயங்கி விழுந்து விட்டார். நண்பரும் உயிருக்கு பயந்து ஓடி விட்டார். விவேகானந்தர் மட்டும் அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.

பாய்ந்து வந்த மாடு, கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதிர்ஷ்டவசமாக தப்பிய நண்பர் ‘சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?’ என்று கேட்டார்.

அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், ‘’நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒருவித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம்’‘. என்றார். இந்த கதையின் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ‘நமக்கு தீமை விளைவிக்க கூடிய எந்த சூழ்நிலையிலும் நாம் அதைக்கண்டு அஞ்சி விடாமல் உறுதியாக எதிர்த்து போராட வேண்டும்’ என்பதே..

No comments:

Post a Comment