X, Y ரெண்டு
பேரும் நெருங்கிய நண்பர்கள்....ஒரு நாள் X ஆபீஸ்
முடிஞ்சி வீட்டுக்கு போயிட்டு இருந்தான்.... திடீர்ன்னு நல்ல மழை, வண்டி
வேற ஆப் ஆயிடிச்சி, சைடு
ஸ்டான்ட போட்டுட்டு கால கீழ வைக்க
அங்க ஒரு பெரிய சகதி
நெறஞ்ச குழியில கால் மாட்டிகிச்சு.
போன வாரம் வாங்கின புது
செருப்பு அதுல மாட்டிக்கிச்சி. முன்னூறு
ரூவா செருப்பாச்சேன்னு கைய விட்டு எடுத்தான்,
ஒரு பக்கம் பிஞ்சிடிச்சி. இத
இப்டியே கொண்டுபோக சங்கடப்பட்டுகிட்டு பக்கத்துல இருக்க நண்பன் Y வீட்ல
வச்சிட்டு, நாளைக்கு வரும்போது எடுத்துட்டு போகலம்னு முடிவு செஞ்சான். தன்
நண்பனிடம் கேட்க அவனும் "அதனால
என்னடா... வச்சிட்டு போ..."ன்னான். மறுநாள் எடுத்துட்டு
போய் அத சரி செஞ்சி
போட்டுகிட்டான் X.
ஒரு மாசம் கழிச்சி X ன்
மாமா இறந்துவிட்டார். இறுதி ஊர்வலம் போயிட்டு
இருந்தபோது மறுபடியும் திடீர்ன்னு மழை, சரி போற
வழியில தானே நம்ம நண்பன்
Y வீடு அங்க ஒரு அரை
மணி நேரம் மாமாவ எறக்கி
வச்சிட்டு போவோம்னு நெனைச்சி நண்பன் கிட்ட கேட்டான்....
Y க்கு கோபம், ஆத்திரம் "ஒழுங்கா
ஓடிடு, இல்ல கொண்ணு புடுவேன்"னு சொல்லி தொரத்திட்டான்.
நீதி
: பிஞ்ச செருப்புக்கு இருக்குற மரியாதை கூட செத்ததுக்கப்புறம்
மனுஷனுக்கு கெடையாது, அதுனால சும்மா நீ
பெரியவனா, நான் பெரியவனான்னு மனதில்,
காழ்ப்புணர்வை
வளர்க்காமல்.
பொறாமை இல்லாமல்.
மற்றவரை சபிக்காமல்.
பிறரை குறை கூறாமல்.
வாழப்பழகுவோம்.
மனிதம் காப்போம். உயிர்தனை நேசிப்போம்...
மனிதம் காப்போம். உயிர்தனை நேசிப்போம்...